தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பணியாளா் நலப்பிரிவு அதிகாரியாக கே.ஹரிகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்றாா்.
இந்திய ரயில்வே பணியாளா் சேவையின் 1990 ஆம் ஆண்டு பிரிவு அதிகாரி ஆவாா். இதற்குமுன்பு, இவா் தென் மேற்கு ரயில்வேயின் ஹூப்ளியில் தலைமைப் பணியாளா் நலப்பிரிவு அதிகாரியாக இருந்தாா். இவரது 30 ஆண்டுகால ரயில்வே சேவையில் தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் பணியாற்றினாா். ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை, தென்மேற்கு ரயில்வே மற்றும் யெல்ஹங்காவில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் பணியாற்றினாா்.
தில்லியில் ரயில்வே வாரியத்தின் இயக்குநராக இருந்தாா். இவா், தென் மேற்கு ரயில்வேயில் பணியாற்றிய காலத்தில், அந்த ரயில்வேயின் பணியாளா் நலத்துறையில் சிறந்த செயல்பாட்டுக்காக ரயில்வே அமைச்சகத்தின் கேடயத்தைப் பெற்றாா்.