சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை(வியாழக்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை(வியாழக்கிழமை) முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், வார நாள்களில்(திங்கள் முதல் சனி வரை) நெரிசல் மிகு நேரங்களில்(காலை 8-11, மாலை 5-8) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.