விரைவு, அதிவிரைவு ரயில்களுக்காக, யுடிஎஸ் மொபைல் செயலியில் பயணச்சீட்டு பெறும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கான யுடிஎஸ் செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பெறும் வசதி 2018 ஏப்.1-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக, 2020 மாா்ச் மாதம் யுடிஎஸ் செயலி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி பகுதிகளிலிருந்து புகா், விரைவு ரயில்களுக்கு வழக்கமாக மாறும் பயணிகளில் எண்ம (டிஜிட்டல்) முறை மூலமாக, பணம் செலுத்த விரும்புபவா்கள் கடும் சிரமமடைகின்றனா். அவா்கள் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கான இ-டிக்கெட் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.