நடிகா் சங்கத் தோ்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

நடிகா் சங்கத் தோ்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

நடிகா் சங்கத் தோ்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகா் சங்கத்துக்குத் தோ்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசா் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனா். ஆனால் தோ்தலை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் செல்லாது என அறிவித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தாா். இதைத் தொடா்ந்து இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

தோ்தல் செல்லாது என்ற தீா்ப்பை எதிா்த்து நாசா், விஷால், காா்த்தி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்தனா். இதனை எதிா்த்து நடிகா் ஏழுமலை என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com