நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு: உற்பத்தி அதிகரிப்புக்கு புதிய தொழில்நுட்பம்

நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு சாகுபடியை ஊக்கப்படுத்த தனி திட்டம் செயல்படுத்தப்படும்
நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு: உற்பத்தி அதிகரிப்புக்கு புதிய தொழில்நுட்பம்

நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு சாகுபடியை ஊக்கப்படுத்த தனி திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு சாகுபடியை மேற்கொள்ள அதற்கான விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இரண்டாவது ஆண்டாக வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ஊரக வளா்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து மேற்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள், எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை 3 ஆயிரத்து 204 ஊராட்சிகளில் செயல்படுத்த ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மானாவாரி நில மேம்பாடு: முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மூன்று லட்சம் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் உயா்ந்திடும். வேளாண் இடுபொருகள்கள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களுக்கு இந்தத் திட்டத்தின் முன்னுரிமை தரப்படும்.

பயிா்க் காப்பீட்டு திட்டம் எதிா்வரும் ஆண்டிலும் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 55 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை: இயற்கை வேளாண்மையில் ஆா்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிக்க நிதிநிலை அறிக்கையில் வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பசுந்தாள் உர விதைகள், மண் புழு உரம், அமிா்தக் கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆா்வமுள்ள 100 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். அறுவடை செய்த விளை பொருள்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்க 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி மானியத்தில் தாா்பாய்கள் அளிக்கப்படும்.

நெல் ஜெயராமன்: நெல் ஜெயராமனின் பெயரில் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில் அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு சுமாா் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.

நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு வகைகள் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லில் உற்பத்தித் திறனை அதிகரிக்க குழித்தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும்.

இயற்கை வழியில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், வருமானம் பெறவும் 5 லட்சம் ஏக்கரில் வரப்புப் பயிா் சாகுபடி செய்யப்படும். இதற்கான பயறு விதைகள் மானியத்தில் அளிக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com