‘நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டுவோம்’: முதல்வர் ஸ்டாலின்

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டுவோம் என்று உலக தண்ணீர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டுவோம் என்று உலக தண்ணீர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக தண்ணீர் நாளையொட்டி, இன்று பல்வேறு தலைவர்கள் நீரின் அவசியம் குறித்து மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியதாவது:

“நீரின்றி அமையாது உலகு’ என்கிற திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து, மேம்படுத்தி, தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம். மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது.

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com