எடப்பாடி: எடப்பாடி அடுத்த எட்டிகுட்டை மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், நாளை (மார்ச் 24) வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மின்நிலையத்தின் வாயிலாக மின் வினியோகம் நடைபெற்றுவந்த கச்சுப்பள்ளி, ஏகாபுரம், கொல்லப்பட்டி, ஆர். புதூர், தைலாம்பட்டி, கோரணம்பட்டி, கோணசமுத்திரம், புதுப்பாளையம், எட்டிகுட்டை மேடு, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், இடங்கணசாலை, தப்பகுட்டை, கன்னந்தேரி மற்றும் எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (மார்ச் 24) வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நடைபெறாது என எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.