என்.எல்.சி நிர்வாகம் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக பாமக கருத்துக் கேட்பு கூட்டம்

விவசாயம் எங்கு பாதிக்கப்பட்டாலும் பாமக போராடும். அந்த வகையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாடுபட்டது பாமக தான். 
கடலூர் மாவட்டம் சிறுவரப்பூரில் பொதுமக்களிடம் கருத்து கேட்டார் அன்புமணி ராமதாஸ்.
கடலூர் மாவட்டம் சிறுவரப்பூரில் பொதுமக்களிடம் கருத்து கேட்டார் அன்புமணி ராமதாஸ்.


கடலூர்: கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் சிறுவரப்பூரில் என்.எல்.சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பாக பாமக சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

பாமக வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது எப்படி வளர்ச்சியாகும். இனிமேல் ஒரு பிடி மண்ணை கூட என்எல்சி நிறுவனம் கைப்பற்ற விட மாட்டோம். என்.எல்.சி வந்தது முதல் இப்பகுதி சீரழிந்து வருகிறது. 1956 ஆம் ஆண்டில் என்எல்சி நிறுவனம் தொங்கப்பட்ட போது 40 கிராமங்களில் 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 40 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.  5 அடியில் தண்ணீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 முதல் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. 

சில லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட என்எல்சியின் தற்போதைய மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் ரூ.11,500 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும், தற்காலிக ஊழியர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தும் நியமிக்க படுகின்றனர். 

விவசாயம் எங்கு பாதிக்கப்பட்டாலும் பாமக போராடும். அந்த வகையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாடுபட்டது பாமக தான். 

எதிர்கட்சியாக இருந்த போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது அமைச்சரானவுடன் காவல்துறை மூலமாக நிலம் கையகப்படுத்த முயற்சித்து வருகிறார். ராணுவமே வந்தாலும் நிலம் கையகப்படுத்த முடியாது. 

தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக 49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியது முதல் எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி நிறைவேற்றவில்லை. எனவே, அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 

8 வழிச்சாலையை எதிர்த்த திமுக, இப்போது அதனை ஏற்கிறது. 8 வழிச்சாலையால் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதால் பாமக எதிர்க்கிறது. என்.எல்.சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நோய் ஏற்படுகிறது.

அரசியல், சட்டரீதியாக பாமக, என்.எல்.சியை எதிர்கொள்ளும். முதல்கட்டமாக கோ.க.மணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து என்.எல்.சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வாக்குறுதி குறித்து பேசுவோம். நிலம் கையகப்படுத்துதல் வாழ்வாதார, சமுதாய பிரச்னை என்பதால் என்எல்சி தனது முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.

மாநில தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், செல்வ.மகேஷ், ஜெ.கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் கே.வீரபத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com