நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் பதவி நீக்கம்: சமஸ்கிருத உறுதிமொழி சா்ச்சை

சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:38 pm IST

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ. ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் ஒருவா் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வா் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைமுறையைப் பின்பற்றாமல் மகரிஷி சரக் சப்த் எனப்படும் உறுதிமொழியை ஏற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல். இதன் பொருட்டு மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்படுகிறாா்.

இந்த விவகாரம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையை முன்னெடுக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபுவுக்கு உத்தரவிடப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமாக பின்பற்றக் கூடிய நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு: கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, துணை முதல்வராக உள்ள தனலட்சுமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனலட்சுமியை, மருத்துவமனை முதல்வராகவும் (பொறுப்பு), மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் (பொறுப்பு) அரசு நியமித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.