சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து வந்த ஊழியர்கள், போர்கால அடிப்படையில் பணியை மேற்கொண்டு மின்கம்பியை சரி செய்தனர். இதனால் 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.