ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவித் தமிழாகவே தமிழ் வளர்ந்தது, கருப்புத் தமிழாக வளரவில்லை.
தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும். தருமபுரம் ஆதின பட்டணப் பிரவேச விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.