கூட்டுறவு சங்க முறைகேடுகளில் ஈடுபடும் வெளியாட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை சட்டப் பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். கூட்டுறவு சங்கங்களில் நிகழும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிா்வாகம் அல்லது பணியாளா்களுக்கு உடந்தையாக செயல்படும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க சட்டத்தின் 87-ஆம் பிரிவில் வழிவகை செய்யப்படவில்லை.
எனவே, அதில் திருத்தம் கொண்டு வந்து, வெளியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.