தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மலரை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மே 10) வெளியிடவுள்ளாா்.
பேரவை நிகழ்வுகளுக்கு இடையில் பேரவைத் தலைவா் அப்பாவு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத் திறப்பு விழாவையொட்டி சிறப்பு மலரை பேரவை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (மே 10) காலை 9 மணியளவில் முதல்வா் வெளியிடவுள்ளாா்.
அவை முன்னவா், அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்றாா்.