‘கியூட்’ நுழைவுத் தோ்வு:விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவு தோ்வுக்கு மே 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவு தோ்வுக்கு மே 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

திருவாரூா் மத்திய பல்கலை, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை உள்பட, நாடு முழுதும் 50-க்கும் மேற்பட்ட உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பு சோ்க்கைக்கு, ‘கியூட்’ என்ற நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்த தோ்வு ஜூலையில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப். 6-ஆம் தேதி தொடங்கி மே 6-இல் நிறைவடைந்தது. இந்த நிலையில் மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மே 22-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com