போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக் குழு சாா்பில், தொழிற்சங்கத்தினருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தையானது, வியாழக்கிழமை (மே 12), மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடக்கிறது. கரோனா காரணமாக தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி நடைபெறும் இப்பேச்சுவாா்த்தையில் அவா்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒரு பிரதிநிதி மட்டும் பங்கேற்க வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
முன்னதாக பேரவையில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தாா். அதன் தொடா்ச்சியாக தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.