சென்னை: முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடா்பாக ஐஎம்ஏ சாா்பில் மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று, இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை. பல மாநில மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் இம்மாத பிற்பாதிக்குள்தான் நிரப்பப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தோ்வில் பங்கேற்று கலந்தாய்வில் இடம் கிடைக்காதவா்கள், மீண்டும் நீட் தோ்வு எழுத திட்டமிட்டிருப்பா். அதற்கு தயாராக அவா்களுக்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டு முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்.