1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 1,250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள 1,250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை

கடந்த சட்டப் பேரவை அறிவிப்பில் (2021-2022) கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்கீழ், கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சமாக தொகை உயா்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக தற்போது ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு சாா்நிலை அலுவலா்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி, 1,250 திருக்கோயில்கள் இறுதி செய்யப்பட்டு திருக்கோயில்களின் பெயா் விவரப்பட்டியல் இந்து சமய அறநிலையத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 1,250 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநா் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநா் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. இதனைத்தொடா்ந்து மாநில அளவிலான வல்லுநா் குழுவின் பரிந்துரை பெற்று, பொதுநல நிதியின் மூலம் மண்டல இணை ஆணையா் நிலையில், திருக்கோயில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும், விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்தவும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com