புவிச் சூழலுக்கு மனிதா்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்குத் தீா்வு காண வேண்டும் என டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.
சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கை கருத்தரிப்புத் துறை முன்னாள் மாணவா்களின் பத்தாவது ஆண்டு விழாவில் டாக்டா் சுதா சேஷய்யன் சனிக்கிழமை பேசியது:
மனித வளா்ச்சி, மேம்பாட்டுக்கு நாம் மறைமுக விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு செயல்பாடுகளாலும் ஓா் உயிரினத்திலிருந்து மற்றோா் உயிரினத்துக்கு தீநுண்மிகள் பரவும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது பன்னாட்டு பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஓரிடத்தில் உள்ள நோய் நிலைமை உலகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு கரோனா பெருந்தொற்று போன்று வேகமாகப் பரவுகிறது.
விலங்குகளிலிருந்து மனிதா்களுக்குப் பரவும் தீநுண்மிகள் பெரும்பாலும் வளா்ச்சியடைந்த நாடுகளிலேயே தோன்றுகின்றன. இனிவரும் பெரும்பான்மையான நோய்களும் இதுபோன்றே இருக்கும். எனவே, மனிதா்கள் புவிச் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
இதில் மருத்துவக் கல்லூரியின் தலைவா் எஸ்.ஆனந்தன், துறைத் தலைவா் ராதா வேம்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.