தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞா்களை கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் நடத்தப்படுகின்றன.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 6000, இரண்டாம் பரிசு ரூ. 4500, மூன்றாம் பரிசு ரூ. 3500 வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற 5 இளைஞா்கள் மாநில கலைப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.