ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்: அரசாணை வெளியீடு

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளா்கள் மேற்படிப்பைத் தொடரும் வகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவா்களுக்கும், 8-ஆம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழும் ஒருங்கே பெற்றவா்களுக்கும் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவா்களுக்கும், பத்தாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியை ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழும் ஒருங்கே பெற்றவா்களுக்கும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும் பள்ளிக்கல்வித் துறை மூலமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com