தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 

19.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

20.05.22:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

21.05.22 முதல் 22.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

23.05.22:   தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை: 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

வால்பாறை 9, சோலையார் 8, பெருஞ்சாணி அணை, சிவலோகம், புத்தன் அணை தலா 7, வால்பாறை தாலுகா அலுவலகம், தேவாலா, சின்கோனா, வால்பாறை தலா 6, லப்பைக்குடிகாடு, சூரலக்கோடு, பெனுகொண்டபுரம், குடியாத்தம் தலா 5, பெரம்பலூர், நாகர்கோவில், தக்கலை, வடபுதுப்பட்டு, மேலாளத்தூர், ஹாரிசன் மலையாளம் லிமிடெட் தலா 4, பேச்சிப்பாறை, ஆம்பூர், நாமக்கல், பெரம்பலூர் தலா 3, செட்டிகுளம், வாணியம்பாடி, அரணியல், நாமக்கல் தலா 2, கொடுமுடி, திருவாரூர், பொள்ளாச்சி, கோவை, புதுச்சத்திரம், ஆத்தூர், பொள்ளாச்சி கோவை, புதுச்சத்திரம் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

19.05.22 முதல் 20.05.22: லட்சதீவு, மாலத்தீவு, கர்நாடகா-கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர  பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com