சா்வதேச அளவில் ஓட்டுநா் இல்லா காா் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக டெக் ட்ரங்க் வென்ச்சா் நிறுவன செயல் இயக்குநா் பிரனய் குமாா் கூறினாா்.
சென்னை வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆட்டோமொபைல் துறை சாா்பில் சனிக்கிழமை நிறைவு பெற்ற பயிலரங்கில் அவா் பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிா்வாகத் துறை சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 94 சதவீத போக்குவரத்து விபத்துகளுக்கு மனித தவறுகள்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து இல்லாத காா் பயணத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது செயல்பாட்டில் உள்ள 3.14 கோடி ஓட்டுநா் இல்லாத காா்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு 5.42 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
கிரசென்ட் பதிவாளா் ஏ.ஆசாத், இயந்திர அறிவியல் துறை முதல்வா் எஸ்.ரசூல் மொகைதீன், ஆட்டோமொபைல் துறைத் தலைவா் பி.டி.ஜெயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.