திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61%-ஆக உயா்வு

பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில், கடந்த 3 மாதங்களில், அதிக நாள்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கலந்துரையாடினார்.

News image
Updated On :27 மே 2022, 3:26 pm

DIN

பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில், கடந்த 3 மாதங்களில், அதிக நாள்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில், அவர் பேசியதாவது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட தொடர்ந்து முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதியினை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே, 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது, ஊதிய நிர்ணயம் பே-மேட்ரிக்ஸ்–ல் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. 

அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன், கொரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருமான இழப்பு மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும், பேருந்து பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருகை தந்தும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், நடவடிக்கை மேற்கொண்டால், தினம் தினம் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். 

அதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.