தமிழகத்திற்கான ரூ. 9, 602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

தமிழகத்திற்கான ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்திற்கான ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.

மே 31, 2022 வரை மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஜனவரி 2022 வரை கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 47,617 கோடியும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி தொகையான 21,322 கோடியும் அடங்கும்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்திற்கு ரூ. 14,145 கோடி, தமிழகத்திற்கு ரூ. 9,602 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 8,874 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com