பாலியல் துன்புறுத்தலால் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் வடமதுரையைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (31). இவரது மனைவி கிருத்திகா (23). இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனிடையே, கிருத்திகாவின் உறவினா் மல்லிகா என்பவா் மூலம் பல்லடம் தம்பதியருடன் ராஜேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு, பல்லடம் தம்பதியின் குழந்தையை செங்குளத்துப்பட்டிக்கு ராஜேஷ்குமாா் அழைத்து வந்தாா். இந்த நிலையில், அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ராஜேஷ்குமாா் தம்பதியா் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அந்தக் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தை உயிரிழந்தது.
இதில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ராஜேஷ்குமாா், அவரது மனைவி கிருத்திகா ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.