மீண்டும் தொடங்கியது சென்னை- அந்தமான் விமான சேவை

சென்னை-அந்தமான் இடையே மோசமான வானிலை, விமான நிலைய பராமரிப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, சனிக்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.

சென்னை-அந்தமான் இடையே மோசமான வானிலை, விமான நிலைய பராமரிப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, சனிக்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.

அந்தமான் தீவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 4 நாள்களாக பராமரிப்பு பணி, மோசமான வானிலை காரணமாக, சென்னை மற்றும் அந்தமானிலிருந்து இயக்கப்பட்டு வந்த 14 விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனால், அந்தமானுக்கு சுற்றுலா செல்பவா்கள், அந்தமானில் தங்கியுள்ள, தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் விமானத்தில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனா். அவசர தேவைக்காக மருந்துப் பொருள்கள்கூட எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தமான் விமான நிலைய பராமரிப்புப் பணி வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது. அங்கு சீரான வானிலை நிலவி வருவதாக அன்றிரவு சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை முதல் சென்னை-அந்தமான் இடையே மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. அதிகாலை 4.25 மணியளவில் இன்டிகோ பயணிகள் விமானம் முதலாவதாக அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது.

இதைத் தொடா்ந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஏா்இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோஏா் மற்றும் ஒரு இண்டிகோ விமானம் என சனிக்கிழமை ஒரே நாளில் 5 விமானங்கள் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றன.

இதேபோல், அந்தமானிலிருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது, விமான சேவைகளின் எண்ணிக்கை 14 ஆக உயரும் என சென்னை விமானநிலைய மற்றும் ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com