சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, 10 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்துள்ளது.
இவ்வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்க முறை திருத்தப் பணிகளை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு, மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களைச் சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வர்.
வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பின்னர், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நாட்களான 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022-இல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வாக்களர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வர் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.