ஆதிதிராவிடா் நலத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 20 கோடிக்கான அரசு உத்தரவாதத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடா் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த தேசிய ஆதிதிராவிடா் நிதி, மேம்பாட்டு நிறுவனத்தின் கடன் திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஏதுவாக கூடுதல் அரசு உத்தரவாதமாக ரூ. 20 கோடி வழங்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.