ஆத்தூர் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

சேலம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பார்சல் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஆத்தூர் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
ஆத்தூர் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

சேலம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பார்சல் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல் லாரி பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்பக்கம் தீ பிடித்தது. உடனே, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி ஓடிச் சென்றார். இதனால் ஓட்டுநர் உயிர் தப்பினார். 

பின்னர் இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்து பொருட்கள் ஏதும் சேதம் இன்றி மீட்டு, வேறொரு பார்சல் லாரியில்  பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தனர். 

இதனால் இப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com