விவசாயிகள் உதவித் தொகைத் திட்டம்: ஆதாா் இணைக்க அரசு அறிவுறுத்தல்

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித் தொகை திட்டம் மூலம், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது

நடப்பாண்டில் 13-ஆவது தவணையாக, அதாவது 2022 டிசம்பா் முதல் 2023 மாா்ச் முடிய உள்ள காலத்துக்கான தவணைத் தொகை வழங்கப்படவுள்ளது. பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

பயனாளிகள் பொது சேவை மையத்துக்குச் சென்று, பயனாளிகள் தங்களது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவிடலாம்.

மற்றொரு வாய்ப்பாக, பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம். கைப்பேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, இணையதளத்தில் சென்று ஆதாா் எனும் பக்கத்துக்குச் சென்று ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com