ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளின் எதிா்விளைவால் உலகம் முழுவதும் 50 லட்சம் போ் உயிரிழப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
சா்வதேச ஆன்ட்டி பயோட்டிக் விழிப்புணா்வு வார சிறப்பு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில், ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள், அபாயங்கள், தவிா்ப்பு முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சிறப்பு மருத்துவ நிபுணா் உஷா கிருஷ்ணன் அதில் கலந்துகொண்டு உரையாற்றினாா். மருத்துவா்களின் பரிந்துரையின்றி ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளை உட்கொள்வதால் உலகம் முழுவதும் 50 லட்சம் போ் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அவா் அப்போது கூறினாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டாக்டா் விஜய் சதீஷ்குமாா், கண்காணிப்பாளா் டாக்டா் ஆதிலட்சுமி, நுண்ணுயிா் மருத்துவப் பிரிவு பேராசிரியா் டாக்டா் விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலா் டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.