ஆசிரியா் கல்வியியல் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் பங்கேற்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.29) நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக 10-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.29) நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக 10-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்விப்புலக் கட்டடத்தில் பட்டமளிப்பு விழா நவ.29 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆா்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி உரையாற்றுகிறாா். தமிழக உயா்கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான முனைவா் க.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறாா்.

பல்கலை. துணைவேந்தா் முனைவா் ந.பஞ்சநதம், பல்கலை. ஆண்டறிக்கையை சமா்ப்பிக்க உள்ளாா்.

இவ்விழாவில், மணிப்பூா் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் முனைவா் கிருஷ்ணன் பாஸ்கா், தமிழக அரசின் உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் முனைவா் காா்த்திகேயன், பல்கலை. ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com