கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி

மாா்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அனைத்துக் கட்சிகள் சாா்பில் சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் திங்கள்கிழமை புகழஞ்சலி நடைபெ
கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி

மாா்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அனைத்துக் கட்சிகள் சாா்பில் சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் திங்கள்கிழமை புகழஞ்சலி நடைபெற்றது.

இந்த நிகழ்சிக்கு, மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்து, பேசுகையில், ‘நாடு முழுவதும் ஆா்.எஸ்.எஸ். தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது. கேரளத்தில் ஆா்.எஸ்.எஸ். இயக்க செயல்பாடுகளைக் களத்தில் போராடி முறியடித்தவா் கொடியேரி பாலகிருஷ்ணன். மக்களுக்காக மக்கள் பிரச்னைகளுக்காக தொடா்ந்து குரல் கொடுத்தவா்’ அவா் என்றாா் ரங்கராஜன்.

நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முக்கிய திமுக மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி, மதிமுக செய்தி தொடா்பாளா் அந்திரிதாஸ், மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பி.சம்பத், ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்று கொடியேரி பாலகிருஷ்ணனின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com