குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம்-நீக்கம்: நாளை குறைதீா் முகாம்

 குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், நீக்கம் செய்திட சென்னையில் சனிக்கிழமை (அக். 8) குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 1:24 am IST

 குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், நீக்கம் செய்திட சென்னையில் சனிக்கிழமை (அக். 8) குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக உணவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை (அக். 8) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, எண்ணை மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை ஆகியவற்றைக் கோரி மனுக்களைப் பதிவு செய்யலாம்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதாவது இருந்தால் அவற்றை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.