மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. மழையின் காரணமாக நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,818 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11,038 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.71அடியாகவும் நீர் இருப்பு 91.42 டி.எம்.சியாகவும் உள்ளது.