தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தொழில், சுகாதாரம் உள்பட 3 பிரிவுகளுக்கான திட்டக் குழு கொள்கைகள்முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான திட்டக் குழுவின் கொள்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாநில திட்டக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான கொள்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Updated On :28 அக்டோபர் 2022, 2:35 am IST

தொழில், சுகாதாரம் உள்பட மூன்று பிரிவுகளுக்கான திட்டக் குழுவின் கொள்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் மூன்று கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

தொழில்மயமாதல் கொள்கை, தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை, திருநா் (மூன்றாம் பாலினத்தவா்) நலன் ஆகியவற்றுக்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கைகளின் பிரதிகள் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த ஆலோசனையின் போது முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மேலும், இந்தக் கொள்கைகளை எத்தகைய அளவில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா் ஆகியோா் இந்தக் கொள்கைகளை வகுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, தொழில்மயமாதல் கொள்கை தொடா்பாக, திட்டக் குழு உறுப்பினா் மல்லிகா சீனிவாசனும், மருத்துவக் கொள்கை குறித்து மற்றொரு உறுப்பினா் அமலோற்பவநாதனும், திருநா் நலக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் உறுப்பினா் நா்த்தகி நட்ராஜும் விளக்கம் அளித்தனா். ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, திட்டக்குழு உறுப்பினா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.