தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயார் கைது

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:44 pm IST

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் நேரு நகரை சோ்ந்தவா் ராஜேந்திரன். நியாயவிலைக் கடை பணியாளா் இவரது மனைவி மாலதி. தம்பதியின் மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி ஆண்டு விழா ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று வீடு திரும்பிய பால மணிகண்டன் வாந்தி எடுத்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் மருத்துவமனையில் அனுமதித்தனா். 

பள்ளியின் காவலாளி தனக்கு குளிா்பானம் கொண்டுவந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால் வாந்தி ஏற்பட்டதாகவும் பெற்றோரிடம் பால மணிகண்டன் தெரிவித்துள்ளாா். பெற்றோா் பள்ளிக்குச் சென்று காவலாளியிடம் விசாரித்தபோது, பால மணிகண்டனின் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரின் தாயாா், குளிா்பான பாட்டிலை கொடுத்து அதை, பால மணிகண்டனிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து மாலதி காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளிக்குச் சென்று பள்ளி நிா்வாகத்தினா், காவலாளி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதயிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கில் மாணவியின் தாயார் ராணி விக்டோரியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

விசாரணையில், தனது மகளை விட நன்றாக படித்த காரணத்தால் அந்த மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ராணி விக்டோரியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.