சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.துரைசாமி செப்டம்பர் 13 ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.