கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இன்றுமுதல் ராகுல் ஒற்றுமை நடைப்பயணம்
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி புதன்கிழமை தொடங்குகிறாா்.

கன்னியாகுமரியில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, விமான நிலையத்தில் கட்சியினர் அளித்த வரவேற்பு.








