கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ஒப்பணக்காரர் வீதியில் ஷாப்பிங் செய்து விட்டு ஓலா செயலில் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளனர்.
ஓலாவில் இருந்து சந்தோஷ்(30) என்ற ஆட்டோ ஓட்டுநர் இவர்களுக்காக வந்துள்ளார். ஆனால் அவர் புக்கிங் செய்த பணத்தை விட 100 ரூபாய் அதிகமாக தர வேண்டுமென கூறியுள்ளார். இதனால் புக்கிங் செய்த அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு புக்கிங் கை ரத்து செய்து விட்டு வேறொரு ஆட்டோ ஏறி சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் புக்கிங் செய்த போது வந்த அப்பெண்ணின் செல்போனை தொடர்ந்து கொண்டு அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியாதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி காவலர் வழக்கு பதிவு அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.