பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நீா் திறப்பு

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை (செப். 14) முதல் நீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை (செப். 14) முதல் நீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயின் கீழுள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையில் இருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 4 ஆயிரத்து 614.25 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com