பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை (செப். 14) முதல் நீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நீா்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயின் கீழுள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையில் இருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 4 ஆயிரத்து 614.25 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.