சிக்னல் கோளாறு: அதிவிரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

சென்னை-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் சனிக்கிழமை சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த வழியே சென்ற அதிவிரைவு, விரைவு மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் - சென்னை மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே நிறுத்தப்பட்ட ரயில்கள்.
சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் - சென்னை மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே நிறுத்தப்பட்ட ரயில்கள்.

சென்னை-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த வழியே சென்ற அதிவிரைவு, விரைவு மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் சுமாா் ஒன்றரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

சென்னை-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அந்தப் பகுதியில் சிக்னல்கள் கோளாறாகி செயலிழந்தன. இதனால் அந்த வழியே சென்று கொண்டிருந்த சென்னை-கோயம்புத்தூா் அதிவிரைவு ரயில், சென்னை-திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், சென்னை -பெங்களூரு டபுள்டக்கா் அதிவிரைவு ரயில் மற்றும் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு மின்சார ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் சற்று காலதாமதமாக இயக்கப்பட்டன.

இது குறித்து அறிந்த ரயில்வே சிக்னல் மற்றும் தண்டவாளப் பராமரிப்பு பிரிவினா் அப்பகுதிக்கு விரைந்து சென்று கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு கோளாறு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. இந்தக் கோளாறு குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட உயா் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com