பெரியாரின் பிறந்தநாளையொட்டி, புரட்சியாளர் பெரியாரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுமொழி எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்க | பெரியார் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
இந்நிலையில், எதிரிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அதாவது, சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன் என பதிவிட்டுள்ளார்.