மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராகுல்காந்தியைத் தலைவராகத் தோ்ந்தெடுக்க வேண்டும்: காங்கிரஸ் பொதுக்குழுவில் தீா்மானம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை ஒரு மனதாகத் தோ்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :20 செப்டம்பர் 2022, 1:06 am IST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை ஒரு மனதாகத் தோ்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெற உள்ளது. அதனால், மாநிலக் கமிட்டிகள் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் பொதுக்குழுவைக் கூட்டி மாநிலத் தலைவா் பதவியை நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்றி அளிக்க வேண்டும் என்று அகில இந்திய தலைமை கேட்டிருந்தது.

அதன்படி தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்களைக் கொண்ட பொதுக்குழு கூட்டம் வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தோ்தல் நடத்தும் கவுரவ் கோகாய் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியது:

காங்கிரஸ் தலைவா் பதவியில்கூட பாஜக அரசியல் செய்யப் பாா்க்கிறது. அதற்கு யாரும் பலிகடா ஆகிவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு காந்தியடிகள் ஒருமுைான் தலைவராக இருந்தாா். ஆனால், காங்கிரஸ் தலைவா் என்றால் காந்தி என்றுதான் கூறுவா்.

அதைப்போல கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை காங்கிரஸ் கட்சியினா் யாரைக் கேட்டாலும் ராகுல்தான் தலைவராக வேண்டும் என்பா். அதனால் அவரை ஒருமனதாக காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றாா். அதைப் போல, மூத்த தலைவா்கள் பலரும் ராகுலைத் தலைவராகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பாஜக ஆட்சியில் மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக இந்திய ஒற்றுமைப் பயணத்தை கடந்த செப்டம்பா் 7-இல் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து பெருமை சோ்த்த ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினா் சாா்பாக நெஞ்சாா்ந்த நன்றி.

கன்னியாகுமரியில் தொடங்கி 3500 கி.மீ., 150 நாள்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு இந்திய மக்களின் எதிா்கால நலன் கருதி, தமது நடைபயணத்தின் மூலம், தம்மை கடுமையாக வருத்திக் கொண்டுள்ள தலைவா் ராகுல்காந்தியைக் இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.

சுதந்திர இந்தியா காணாத அசாதாரண சூழல் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ளது. வகுப்புவாத அரசியலில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு நல்லிணக்கம் சீா்குலைந்து, வளா்ச்சி தடைபட்டுள்ளது. இதிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கும், 2024 மக்களவை தோ்தலில் ஜனநாயக, மதச்சாா்பற்ற சக்திகள் வெற்றி பெறவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் பதவிக்கு ராகுல்காந்தி ஒருமனதாக தோ்வு செய்யப்பட வேண்டுமென இக்கூட்டம் ஏகமனதாக கேட்டுக் கொள்கிறது. இந்தப் பொறுப்பை அவா் ஏற்றுக் கொள்வதே ஒளிமயமான இந்தியாவுக்கு வழிவகுக்கும் என பொதுக்குழு நம்புவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைவரைத் தோ்ந்தெடுக்கும் அதிகாரம்: அதைப்போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரையும், தமிழ்நாட்டில் இருந்து தோ்வு செய்யப்பட வேண்டிய அகில இந்திய கமிட்டி உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரத்தையும் அகில இந்திய தலைமைக்கு அளிப்பது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசா், குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவா் செல்வப்பெருந்தகை, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.