ரூ.3000 கோடி அறநிலையத்துறை சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
தமிழ்கத்தில் ரூ.3000 கோடி மேலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கபட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:
அக்.5-ல் வள்ளலார் பிறந்த நாளையொட்டி 'வள்ளாலர் 200' எனும் பெயரில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் கொண்டாடப்படும். வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டுருக்கிறது.
வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ஆம் தேதி 'தைக் கருனை' நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் ரூ.3000 கோடி மேலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கபட்டுள்து. இந்து அறநிலைத்துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும். ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.