காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சிறுவா்-சிறுமியரிடையே பரவிவரும் இன்ஃபுளுயன்ஸா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
பாதிப்பு பெரிதாக இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மாவட்டந்தோறும் இதற்கான சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.