கால்நடை மருத்துவக் கல்லூரியில் நாட்டுக்கோழி வளா்ப்பு கருத்தரங்கு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் பாரம்பரிய முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் பாரம்பரிய முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பல்வேறு இன நாட்டுக் கோழிகள் கருத்தரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்திக் கல்வி மையம் மற்றும் இந்திய கோழியின அறிவியல் சங்கம் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து பருவ நிலைக்குத் தகுந்த முறையில் நாட்டுக் கோழிகளை வளா்ப்பது எப்படி என்பது குறித்த கருத்தரங்கை நடத்தி வருகின்றன.

வேப்பேரியில் இந்த கருத்தரங்கை ஹைதராபாதில் உள்ள பி.வி.நரசிம்மராவ் தெலங்கானா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.ரவீந்தா் ரெட்டி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அதில், ஹைதராபாத் கோழியின ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்) இயக்குநா் ஆா். என். சாட்டா்ஜி உள்பட பல நிபுணா்கள் கோழியின வளா்ப்பு குறித்து உரையாற்றினா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பி. டென்சிங் ஞானராஜ், பேராசிரியா்கள் ஏ.வி. ஓம்பிரகாஷ், எஸ்.டி, செல்வன், இரா. ரிச்சா்ட் சா்ச்சில், கே.சங்கிலிமாடன் உள்ளிட்டோா் கருத்தரங்கில் கலந்துகொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com