நவராத்திரி மஹோத்ஸவம்
கும்பகோணம் அருகேயுள்ள நந்திபுர விண்ணகரம் என்கிற நாதன் கோயிலில் உள்ள ஸ்ரீஜகந்நாதப் பெருமாள் கோயிலில் செண்பகவல்லி தாயாருக்கு நவராத்திரி உத்ஸவம் செப். 26}இல் தொடங்கி, அக். 5}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அக். 5}இல் குதிரை வாகனத்தில் அம்பு போடுதல் வைபவம் நடைபெறும்.
தொடர்புக்கு} 98437 95904.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட தியாகதுருகம் அருகேயுள்ள பல்லகச்சேரி அருள்மிகு தீர்த்தநாயகி சமேத ராமநாதேஸ்வரகோயில் நவராத்திரி உத்ஸவ விழா செப். 26 முதல் அக். 5 வரை நடை
பெறுகிறது.
தொடர்புக்கு} 99440 94877.
திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தப்பளாம்புலியூரில் உள்ள ஸ்ரீநித்ய கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீவ்யாகபுரீஸ்வர ஸ்வாமி கோயிலில் நவராத்திரி உத்ஸவம் செப். 26}இல் தொடங்கி, அக். 5}இல் நடைபெறுகிறது.
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதின சமயப் பிரசார நிலையத்தில் நவராத்திரி விழா செப். 26 முதல் அக். 4 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, லலிதா சகஸ்ரநாம பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், இசை நிகழ்ச்சிகள், சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு} 044}2814 2642.
சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட சின்ன திருப்பதி என்.ஜி.ஜி.ஓ. காலனி ஸ்ரீபாலா தேவஸ்தானத்தில் ஸ்ரீசாரதா நவராத்திரி பெருவிழா செப். 26 முதல் அக். 5 வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 94421 91793, 88389 11220.
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் சங்கர்லால் ஜெயின் தெருவில் உள்ள ஸ்ரீ சங்கர மடம் வேத பாட சாலையில் செப். 26 முதல் அக். 5 வரை நவராத்திரி விழா ஹோமங்கள், பாராயணங்கள், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு} 94441 39934.