திருச்சியில் அக். 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சியில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சியில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று முதல் 15 நாள்களுக்கு அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com