ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது: தொல்.திருமாவளவன்

ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
தொல்.திருமாவளவன்.
தொல்.திருமாவளவன்.

ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக். 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு, அனுமதி வழங்கக் கோரி அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபுவை ஞாயிற்றுக்கிழமை டிஜிபி அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அக். 2ஆம் தேதி, அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். தமிழகத்தை ஜாதி, மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு கும்பல் ஒன்று சதி திட்டம் தீட்டி வருகிறது. அக். 2-ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று ஆா்.எஸ்.எஸ். தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கான தேவை என்ன? ஆகையால், அந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. பேரணிக்கு அனுமதி அளிப்பதன் மூலம், அது வன்முறைக்கு வழி வகுத்ததாகிவிடும்.

தமிழகத்தில் நிகழும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக அரசை கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது. பாஜகவுக்கு உரிய நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பா்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com